மூன்று நாளில் முடியும் ‘அயலான்’ ஷூட்டிங்… ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் !

மூன்று நாளில் முடியும் ‘அயலான்’ ஷூட்டிங்… ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் !

என்னை ஆங்கிலத்தில் பேச வைத்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாளில் முடியும் ‘அயலான்’ ஷூட்டிங்… ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் !

நேற்று, இன்று, நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளிவரும் இப்படத்தில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மூன்று நாளில் முடியும் ‘அயலான்’ ஷூட்டிங்… ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் !

24 பிரேம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடுவது போன்று போஸ்டர் இடம்பெற்றிருந்தது.

மூன்று நாளில் முடியும் ‘அயலான்’ ஷூட்டிங்… ரகுல் ப்ரீத் சிங்குக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் !

இந்நிலையில் அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய இருப்பதாகவும், இயக்குனர் ரவிகுமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான தருணம் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்த ட்விட்டுக்கு பதில் ட்விட்டுள்ள சிவகார்த்திகேயன், உங்களுக்குடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சி என்றும், படப்பிடிப்பு நேரத்தில் என்னை ஆங்கிலம் பேச வைத்ததற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார். நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலிஷ் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Share this story