அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார்… வைரலாகும் பயல் கோஷின் முன்னாள் ட்வீட்!

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார்… வைரலாகும் பயல் கோஷின் முன்னாள் ட்வீட்!

நடிகை பயல் கோஷின் திரைத்துறையில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த பழைய ட்வீட் தபோது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பின்னர் அனுராக் இந்த குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்று குற்றம் தெரிவித்திருந்தார்.

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார்… வைரலாகும் பயல் கோஷின் முன்னாள் ட்வீட்!

இதையடுத்து அனுராக்கிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். நடிகை டாப்ஸி, அனுராக்கின் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ், இரண்டாவது மனைவி கல்கி கோச்செலின், இயக்குனர்கள் அனுபவ் சின்ஹா, ராம் கோபால் வர்மா இன்னும் பலர் அனுராக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் பயல் கோஷ் முன்னாள் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார்… வைரலாகும் பயல் கோஷின் முன்னாள் ட்வீட்!

“இங்கு யாரும் யாரையும் கற்பழிப்பதில்லை… அவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள், உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்றால் விலகிச் செல்லுங்கள். அதை விடுத்து பெரிய நாடகமாடுவதற்கு இங்கு எந்த அவசியமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story