அடுத்த படத்தின் மூலம் அதிரடியாகக் களமிறங்கும் பாலா… இந்த முறை இரண்டு ஹீரோக்கள்!

அடுத்த படத்தின் மூலம் அதிரடியாகக் களமிறங்கும் பாலா… இந்த முறை இரண்டு ஹீரோக்கள்!

இயக்குனர் பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் பாலா கடைசியாக துருவ் விக்ரமை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வியாகவும் பிரச்சினையாகவும் அமைந்தது. அதையடுத்து சில காலத்திற்கு மௌனமாக இருந்த பாலா தற்போது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த படத்தின் மூலம் அதிரடியாகக் களமிறங்கும் பாலா… இந்த முறை இரண்டு ஹீரோக்கள்!

இந்தப் படத்தில் உதயநிதி மற்றும் அதர்வா இருவரும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதர்வா ஏற்கனவே பாலா இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் நடித்துள்ளார். உதயநிதி இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார்.

பாலா இயக்கவிருக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறதாம்.

மீண்டும் வின்டேஜ் பாலா-வாக திரும்பி வருவார் என்று நம்புவோம்!

Share this story