கொரோனா அச்சத்திலும் படப்பிடிப்பிற்கு தயாராகிய ஸ்டார் நடிகர்கள்!

கொரோனா அச்சத்திலும் படப்பிடிப்பிற்கு தயாராகிய ஸ்டார் நடிகர்கள்!

நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் ஊரடங்கும் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. அதனால் மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமாத்துறை முடங்கியுள்ளது. தற்போது  சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ‘பெல்பாட்டம்’ படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
Bell Bottom first look: Akshay Kumar announces spy thriller based ...
நடிகர் சல்மான் கான் ‘ராதே’ என்ற படத்தில் நடித்து வந்தார். கொரோனாவுக்கு முன்பு படப்பிடிப்பு நடந்த நிலையில் ஊரடங்கு அறிவிப்பிற்குப் பின் நிறுத்தப்பட்டது. தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மொத்தம் 12 ஷாட்டுகள் தான் இன்னும் எடுக்கப்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் இன்னும் படமாக்க வேண்டி இருக்கிறதாம்.
கொரோனா அச்சத்திலும் படப்பிடிப்பிற்கு தயாராகிய ஸ்டார் நடிகர்கள்!
மும்பையில் பெய்த கனமழையால் மக்கள் நிறைய துயரங்களை சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் நடத்த முடியாமல் போனது. எனவே தற்போது படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Share this story