பிரம்மாண்டமாக முடிந்தது பிக்பாஸ் 4… “ஆரி டைட்டில் வின்னர்” 50லட்சம் பரிசு… உற்சாகத்தில் ரசிகர்கள் !

பிரம்மாண்டமாக    முடிந்தது பிக்பாஸ் 4…    “ஆரி டைட்டில் வின்னர்”      50லட்சம் பரிசு…  உற்சாகத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை கமல் விருது கொடுத்து அறிவித்தார். தொடர்ந்து பாலாஜி ரன்னரானார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தனியார் தொலைக்காட்சியில் 104 நாட்களாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 4 பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஏற்கனவே மூன்று சீசன் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது.

பிரம்மாண்டமாக    முடிந்தது பிக்பாஸ் 4…    “ஆரி டைட்டில் வின்னர்”      50லட்சம் பரிசு…  உற்சாகத்தில் ரசிகர்கள் !

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறுவார். அதன் அடிப்படையில் முதலில் குறைவான வாக்குகள் பெற்று, பாடகர் வேல்முருகன், நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வெளியேறினர்.

பிரம்மாண்டமாக    முடிந்தது பிக்பாஸ் 4…    “ஆரி டைட்டில் வின்னர்”      50லட்சம் பரிசு…  உற்சாகத்தில் ரசிகர்கள் !

அதன்பிறகு ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா, கேபி, ஷிவானி, அஜீத் என அடுத்தத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறி வந்தனர்.

பிரம்மாண்டமாக    முடிந்தது பிக்பாஸ் 4…    “ஆரி டைட்டில் வின்னர்”      50லட்சம் பரிசு…  உற்சாகத்தில் ரசிகர்கள் !

கடைசி நாளான இன்று நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியை கமல் சிறப்பாக தொகுத்து வழங்கினார். பின்னர் போட்டியாளர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்த சோம் மற்றும் ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டனர். மீதியிருந்த மூன்று பேரில் ரியோவும் வெளியேற்றப்பட்டார்.

பிரம்மாண்டமாக    முடிந்தது பிக்பாஸ் 4…    “ஆரி டைட்டில் வின்னர்”      50லட்சம் பரிசு…  உற்சாகத்தில் ரசிகர்கள் !

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆரியையும், பாலாஜியும், கமல் மேடைக்கு அழைத்து வந்தார். போட்டியாளர் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தநிலையில் ஆரிதான் ‘பிக்பாஸ் வின்னர்’ என கமல் அறிவித்தார். பின்னர் ஆரிக்கு விருது வழங்கப்பட்டு, 50லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் கமல். இதைத்தொடர்ந்து பாலாஜி ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்று கோலாகலமாக முடிவடைந்தது.

Share this story