கணவர் திடீர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் கதறிய பிரபல நடிகை…

கணவர் திடீர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் கதறிய பிரபல நடிகை…

கணவர் இறந்ததால் பிக்பாஸ் வீட்டில் முன்னணி நடிகை ஒருவர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் திடீர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் கதறிய பிரபல நடிகை…

இந்தியாவில் பலமொழிகளில் சூப்பர் ஹிட் பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி மலையாளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபல மலையாள டப்பிங் கலைஞரும், நடிகையுமான பாக்யலட்சுமியும் கலந்துக்கொண்டுள்ளார்.

கணவர் திடீர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் கதறிய பிரபல நடிகை…

இதனிடையே பாக்கியலட்சுமி தனது கணவர் ரமேஷ்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் பாக்கியலட்சுமியின் கணவர் ரமேஷ்குமார் திடீரென இறந்துவிட்டார். இந்த செய்தி பிக்பாஸ் வீட்டிலிருந்த பாக்யலட்சுமிக்கு தெரிவிக்கப்ட்டது. இந்த செய்தியை கேட்ட அவர், சிறிது நேரம் அமைதியாக இருந்து, பின்னர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதாக செல்ல விரும்புகிறீர்களா என பிக்பாஸ் கேட்டபோது, கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதால், அங்கு சென்றால் என்னவித பிரச்சனை ஏற்படும் என தெரியவில்லை என்று கூறினார்.

கணவர் திடீர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் கதறிய பிரபல நடிகை…

இதையடுத்து தனது மகனிடம் போனில் பேசவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இறுதி சடங்கில் தனது மகனை கலந்துக்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்த பாக்யலட்சுமிக்கு, சகப்போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர். அப்போது இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளவேண்டும் என தனது விருப்பத்தை சகப்போட்டியாளர்களிடம் கூறி ஆதங்கப்பட்டு கொண்டார். நடிகை பாக்யலட்சுமிக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share this story