நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார் பிக்பாஸ் ரன்னர் பாலாஜி முருகதாஸ்.

நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து பிரம்மாண்டமாக நடந்து முடிந்து. 18 போட்டியாளர் கலந்து விளையாடிய இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வந்தனர். பிக்பாஸ் சீசன் 4 முடிந்துவிட்டதால், தற்போது அடுத்த சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நிதானமாக விளையாடிய ஆரி, 10கோடி வாக்குகள் பெற்று வின்னராக மகுடம் சூடினார். அதற்கு அடுத்த இடத்தில் இருந்த பாலாஜி ரன்னராக தேர்தெடுக்கப்பட்டார். இந்த விளையாட்டில் இவர்கள் இருவரும் எலியும், பூனையுமான இருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிச்ச நாள் முதலே சண்டைப்போட்டிக்கொண்டனர். பிக்பாஸ் சீசன் 4ல் இவர்கள் தோன்றும் காட்சிகள் வேற லெவல்ல இருக்கும். இப்படி சண்டை, சச்சரவுகள், கொண்டாட்டங்கள், காதல் கிசுகிசுகள் என ஜாலியாக நடந்து முடிந்ததது பிக்பாஸ் சீசன் 4.

நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்த வெளியே வந்த போட்டியாளர்கள், சமூகவலைத்தளங்களில் அவர்களின் ரசிகர்களுக்கு வீடியோக்கள் மூலமும், மெசேஜ்கள் மூலமும் தங்களது நன்றியை தெரிவித்து வந்தனர்.

இந்நிகழ்ச்சி பங்கேற்ற ரன்னர் பாலாஜி மட்டும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லை என ரசிகர்கள் புலம்பி தீர்த்தனர். இதையடுத்து இன்று பாலாஜி, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் அன்புக்கும், ஓட்டுக்கும், எல்லாத்துக்கும் நன்றி. நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை. எல்லோரும் என்னை லைப் வரவில்லை என சொல்லியிருந்தார். அதனால் இந்த சின்ன வீடியோவை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவர் மீதும் மிகுந்த அன்பு வைத்துள்ளேன் என பாலாஜி உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Share this story