புறம் பேசுவதை எப்போது நிப்பாட்டுவீங்க… ரம்யாவை வறுத்தெடுத்த ரசிகர்

புறம் பேசுவதை எப்போது நிப்பாட்டுவீங்க…  ரம்யாவை வறுத்தெடுத்த ரசிகர்

முதுகுக்கு பின்னால் புறணி பேசுகிறீர்கள் என ரம்யா பாண்டியிடம் கேள்வி கேட்ட பிக்பாஸ் ரசிகரால் , ரம்யாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. போட்டியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.

புறம் பேசுவதை எப்போது நிப்பாட்டுவீங்க…  ரம்யாவை வறுத்தெடுத்த ரசிகர்

இந்நிலையில் தொடங்கிய முதல் சில வாரங்கள், எல்லோருக்கும் பிடித்தமான போட்டியாளராக இருந்தார் ரம்யா பாண்டியன். ஆனால் எப்போதும் சிரித்தப்படியே எல்லோருக்கும் பின்னால் புறணி பேசி வந்தார். தான் புறணி பேசுவது மட்டுமின்றி மற்றவர்களையும் தூண்டி விட்டு வந்தார்.

பாலாஜிக்கு எப்படியே, அதேபோன்று ரம்யாவுக்கும் ஆரியை கண்டால் பிடிக்காது. ஆரிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உடனே எதிர் அணியினருடன் சேர்ந்து கொண்டு ஆரியை கட்டம் கட்டி பேசி வந்தார் ரம்யா.

பிக்பாஸ் வீட்டில் ஆரி வாய்யை திறக்கவே கூடாது என்று தடை விதிக்காத குறையாக இருந்து வந்ததது இவரது திருவிளையாடல். இதனால் கடுப்படைந்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அவரை கேவலமாக விமர்சித்து வந்தனர்.

புறம் பேசுவதை எப்போது நிப்பாட்டுவீங்க…  ரம்யாவை வறுத்தெடுத்த ரசிகர்

இந்நிலையில் இந்த வாரம் காலர் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து சிலம்பரசன் என்ற ரசிகர் கால் செய்தார். ரம்யாவிடம் பேச விருப்பப்பட்ட அவர் முன்னதாக கமல்ஹாசனிடம் பேசினார். அப்போது நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தொகுத்து வழங்குவதுதான் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து ரம்யாவிடம் பேசிய ரசிகர், நல்லா விளையாடுறீங்க. ஆனால் குழந்தை மருத்துவர் போலதான் இன்னமும் இருக்கீங்க. எல்லாத்தையும் பின்னாடியே பேசுறீங்களே.. எப்போ ஆரி போல நெத்தியில அடிச்சா மாதிரி முன்னாடி பேச போறீங்க என்று கேட்டார்.

அதனைக் கேட்ட ரம்யா, நீங்க சொல்லிதான் எனக்கு இது தெரியுது. இதனாலதான் எல்லாரும் சேஃப் கேம் விளையாடுறேன் சொல்றாங்க போல. இனிமே மூஞ்சுக்கு நேரா சொல்றேன் என்று கூறினார்.

புறம் பேசுவதை எப்போது நிப்பாட்டுவீங்க…  ரம்யாவை வறுத்தெடுத்த ரசிகர்

தொடர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து ஷிவானியும் ரம்யாவும் ரசிகர் குறித்து பேசினர். அப்போது நீங்க எப்போ பின்னாடி பேசுனீங்க என்று ஷிவானி கேட்க, ஆரியை பத்தி பேசினத சொல்றாங்க போல என்று ஒத்துக்கொண்டார் ரம்யா.

பிக்பாஸ் முடியும் நிலையில் இந்த வாரமும் பாலாஜி மற்றும் ரம்யா, ஆரியை வச்சு செய்வார்கள் என தெரிகிறது. இதனால் இந்த வாரமும் சில பல சம்பவங்கள் இருக்கும் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கிசுகிசுக்க ஆரம்பிச்சிட்டார்கள்.

Share this story