உங்க பேச்ச நான் கேக்கவே இல்ல… ஆரியிடம் உருகிய ஆஜீத்

உங்க பேச்ச நான் கேக்கவே இல்ல… ஆரியிடம் உருகிய ஆஜீத்

91 நாள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த ஆஜீத், இந்த வாரம் அதிரடியாக வெளியேறியுள்ளார். ரம்யாவா? ஆஜீத்தா? என கடைசி நேர பரப்பரப்பில் ஆஜீத்தை, கமல் எவிக்ட் பண்ணார் .

பிரமாண்டமாக ஆரம்பிச்ச பிக் பாஸ் 4 சீசனில் வேல்முருகன், ஆஜீத் மற்றும் சுசித்ரா என மூன்று பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர். வந்தவேகத்திலேயே வேல்முருகனும், சுச்சியும் வெளியேற, 90 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஸ்டாங்காக இருந்த ஆஜீத், இந்தவாரம் வேறுவழியின்றி வெறியேறினார்.

உங்க பேச்ச நான் கேக்கவே இல்ல… ஆரியிடம் உருகிய ஆஜீத்

டைட்டில் வின்னர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்ட ரம்யா பாண்டியன், இந்த வாரம் வெளியே கிளம்பிடுவோமான்னு கடைசி வரை திகில் அடைந்த பாண்டியனாகவே மாறிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை ஆஜீத்தை ஒரு அல்லக்கையாகவே பயன்படுத்திய பாலா, ஒரு முறை கூட அவருக்கு ஒரு நல்ல அட்வைஸ் கொடுத்ததே இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது பாலாவுக்கு அட்வைஸை ஒன்றை கொடுத்தார் ஆஜீத். எல்லாரிடமும் “பார்த்து வார்த்தையை விடுங்க” என பாலாவுக்கு அறிவுரை சொன்னார்.

உங்க பேச்ச நான் கேக்கவே இல்ல… ஆரியிடம் உருகிய ஆஜீத்

கமலிடம் வந்து பாராட்டுக்களை பெற்று தனது ஏவியை பார்த்து ரசித்து விட்டு ஹவுஸ்மேட்களிடம் பேசிய ஆஜீத், ரம்யா அக்காவுக்கு, பின்னாடி பேசாதீங்க, எதுவா இருந்தாலும் ஆரி சொல்வதை போல நேரா நெத்தியடியாகவே பேசுங்க என ரம்யாவை மேலும் உசுப்பேத்தி விட்டு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்து ஆஜீத்தை ஆரிக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், அவர் சொல்லும் அட்வைஸ் எதையும் ஏன் கேட்க வேண்டும் என்கிற மனநிலையில், பலமுறை அவரை அவமதித்து வந்தார் ஆஜீத். இந்நிலையில், அகம் டிவி வழியே ஆரியை பார்த்து பேசிய ஆஜீத், நீங்க சொன்ன அட்வைஸை நான் கேட்கவே இல்லை.

கடைசியா இந்த வாரம் கேட்டேன். ஓப்பன் அப் ஆனேன். அதற்கு ரொம்ப நன்றி! உங்களுக்கு நான் என்ன சொல்றது, சூப்பரா விளையாடுறீங்க, அப்படியே விளையாடுங்க எனக் கூறிவிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு வெளியேறினார் ஆஜீத்.

உங்க பேச்ச நான் கேக்கவே இல்ல… ஆரியிடம் உருகிய ஆஜீத்

பாடகர்கள் பொதுவா அதிகமாக பேச மாட்டாங்க. பாடும் நேரம் வந்தால், அவர்களை பிடிக்க முடியாது. இது உங்களுக்கான பிளாட்ஃபார்மாக கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த 90 நாட்களில் உங்களுக்கு கிடைத்திருக்கும் புகழ், வெளியே போனால் தெரியும். ஆஜீத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என கூறினார் கமல்.

Share this story