பிக்பாஸ் வீட்டைச் சூழ்ந்த தண்ணீர்…பீதியான போட்டியாளர்கள்… ஹோட்டலில் தங்க வைப்பு!

பிக்பாஸ் வீட்டைச் சூழ்ந்த  தண்ணீர்…பீதியான  போட்டியாளர்கள்… ஹோட்டலில் தங்க வைப்பு!

பரபரப்பாக நடந்து வரும் பிக்பாஸ் 4-வது சீசனில் நிவர் புயலை விட பெரிய புயல் அடித்து வருகிறது. போட்டியார்களுக்கிடையே தினம் தினம் இடி மின்னல் போர் தான்.

பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகள் அந்தளவிற்கு சரிவரவில்லை என்று தற்போது நிவர் புயல் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளது.

ஆம், சென்னை மக்களை சுழட்டி சுழட்டி அடித்த புயல் பிக்பாஸ் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து பெய்து வந்த கனமழையில் பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் கட்டமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்துவிட்டதாம். பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

Bigg Boss 4


இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். ஆள விடுங்கடா சாமி நாங்க கிளம்புறோம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்களாம். இதனால் பிக் பாஸ் குழு போட்டியாளர்களை பக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்க வைத்துள்ளனராம்.

அதுவும் போட்டியாளர்கள் அனைவரையும் அதி தீவிரப் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டைச் சூழ்ந்த  தண்ணீர்…பீதியான  போட்டியாளர்கள்… ஹோட்டலில் தங்க வைப்பு!

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறதாம். இன்று இரவு போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பழைய காட்சிகள் சிலவற்றை இன்றைய எபிசோடில் சேர்த்து ஒளிபரப்ப இருக்கிறார்களாம் பிக்பாஸ் குழுவினர்.

Share this story