தொடர்ந்து வலுக்கும் அனிதா- சுரேஷ் மோதல்… இந்த வாரம் குறும்படம் உண்டா?

தொடர்ந்து வலுக்கும் அனிதா- சுரேஷ் மோதல்… இந்த வாரம் குறும்படம் உண்டா?

விஜய் டிவியில் பிக்பாஸ் 4-வது சீசன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் பிக்பாஸ் என்றால் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு சீசனிலும் குறிப்பாக இரண்டு போட்டியாளர்களுக்கு மட்டும் எப்போதும் சண்டை ஏற்படும்.

அப்படி இந்த சீசனில் அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. வெளியாகும் அனைத்து ப்ரோமோக்களிலும் இருவரின் சண்டை தான் காண்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து வலுக்கும் அனிதா- சுரேஷ் மோதல்… இந்த வாரம் குறும்படம் உண்டா?

சுரேஷ், ”செய்தி வாசிப்பாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும்” என்று கூறினார். அது தன்னை புண்படுத்தியதாக அனிதா சம்பத் தெரிவித்தார். பின்னர் சுரேஷ் நான் செய்தி வாசிப்பாளர் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார். அதையடுத்து இருவருக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இப்போது பேசினாரா? இல்லையா என்று குறும்படம் போடவேண்டும் என்றவாறு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வலுக்கும் அனிதா- சுரேஷ் மோதல்… இந்த வாரம் குறும்படம் உண்டா?

இன்று வெளியான ப்ரோம்விலும் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை என்று கேட்கும் போது உங்களுக்கு நான் சொன்னால் புரியாது, குறும்படம் போட்டு காட்ட வேண்டும்’ என கோபத்துடன் கூறுகிறார்.

எனவே இந்த வார இறுதியில் ஆண்டவர் தரிசனத்தில், குறும்படம் கட்டாயம் இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this story