சூர்யா பட நடிகர் கொரானாவால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி…

சூர்யா பட நடிகர் கொரானாவால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி…

‘அஞ்சான்’ படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூர்யா பட நடிகர் கொரானாவால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி…

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் நாடு முழுவதும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளார். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊடரங்கு உள்ளிட்ட பல கட்டுபாடுகளை கொண்டு வந்தாலும், தொற்றை கட்டுப்படுத்த முடியவிலை.

சூர்யா பட நடிகர் கொரானாவால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி…

இதற்கிடையே சினிமா படம் எடுக்க அனுமதியுள்ளதால் பல ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்வதால் நடிகர், நடிகைகளுக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இந்தி சினிமாவில் அமீர் கான், ஷாருகான், ஆலியா பட், ரன்வீர் கபூர், மாதவன், கோவிந்தா ஆகியோர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சூர்யா பட நடிகர் கொரானாவால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி…

இந்நிலையில் இந்த தொற்றுக்கு ஆளாகி இந்தி நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்தார். சமீபத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்‘ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story