இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை சோனு சூட் அதிரடி முடிவு !

இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை சோனு சூட் அதிரடி முடிவு !

பாலிவுட் நடிகர் சோனு சூட்டை திரைப்படங்களில் வெறும் வில்லனாக மட்டுமே தெரிந்தவர்களுக்கு நிஜவாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோ என்பதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தான் மக்களுக்கு உதவி செய்வதை பப்லிசிட்டி செய்து அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் நடிகர் சோனு சூட் ,கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அனைதைத்தும் செய்திருக்கிறார்.

இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை சோனு சூட் அதிரடி முடிவு !

சமீபத்தில் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த தகவல் வெளியாகி மெய்சிலிற்கவைத்தது.

இப்படி நாளுக்கு நாள் நன்மைகளை செய்துவரும் சோனு சூட்டை மக்கள் ஒரு நிஜ ஹீரோவாக பார்ப்பதால் , இனி வில்லன் கேரக்டர் கிடைத்தாலும் நடிக்கப்போவதில்லை என சோனு சூட் முடிவு செய்துள்ளார். இதனால் சோனுசூட்டிற்கு படங்களில் ஹீரோ வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.மேலும் அவரது இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சோனு சூட் பொம்மாயி படத்தில் வில்லனாக நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story