பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதி…

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதி…

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதி…

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார் தீபிகா படுகோனே. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. தற்போது அவர் நடித்து வரும் படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதி…

தீபிகாவுடன் வீட்டில் அவரது தந்தை பிரகாஷ் படுகோனே, தீபிகாவின் தாய் மற்றும் தங்கை உள்ளனர். முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனே, கொரானா அறிகுறி காரணமாக ஏற்கனவே பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரானா தொற்று உறுதி…

இந்நிலையில் தனது தந்தையை தொடர்ந்து தீபிகா படுகோனேவுக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தீபிகா, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். தீபிகா விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this story