அல்லு அர்ஜுனோடு ஆட்டம்போட 1.5 கோடி ரூபாய் கேட்ட தோனி பட நடிகை !

அல்லு அர்ஜுனோடு ஆட்டம்போட 1.5 கோடி ரூபாய் கேட்ட தோனி பட நடிகை !

தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்க இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படப் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கின்றன.

அல்லு அர்ஜுனோடு ஆட்டம்போட 1.5 கோடி ரூபாய் கேட்ட தோனி பட நடிகை !

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.

அல்லு அர்ஜுனோடு ஆட்டம்போட 1.5 கோடி ரூபாய் கேட்ட தோனி பட நடிகை !

இந்நிலையில் இப்படம் 4 மொழிகளில் வெளியாவதால் ஹிந்தி பட நாயகி ஒருவரை படத்தில் ஈடுபடுத்தினால் நன்றாக இருக்கும் என எண்ணிய படக்குழு , எம்எஸ் தோனி படத்தில் நடித்த நடிகை திஷா பதானியை ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளனர். ஆனால் அந்த ஒரு பாடலுக்கே திஷா பதானி 1.5 கோடி ருபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.
இதனால் படக்குழுவினர் வாயடைத்துப்போயுள்ளனர் . ஏனெனில்
படத்தின் நாயகி ராஷ்மிக்காவுக்கே 2 கோடிக்குள்ளாக தான் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் !

Share this story