லாக்டவுன் நேரத்தில் காதலருடன் ஊர்சுற்றிய பாலிவுட் நடிகை.. வசமாக கவனித்த போலீசார்

லாக்டவுன் நேரத்தில் காதலருடன் ஊர்சுற்றிய பாலிவுட் நடிகை.. வசமாக கவனித்த போலீசார்

லாக்டவுன் நேரத்தில் காதலனுடன் ஊர்சுற்றிய பிரபல பாலிவுட் நடிகையை வசமாக போலீசார் கவனித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரானாவின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மும்பையில் கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவை இல்லாமல் பொதுமக்கள் மும்பை நகரில் சுற்றினால் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லாக்டவுன் நேரத்தில் காதலருடன் ஊர்சுற்றிய பாலிவுட் நடிகை.. வசமாக கவனித்த போலீசார்

இதற்கிடையே பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. அதேபோன்று இளம் ஹீரோவாக பிரபலமாகி வருபவர் நடிகர் டைகர் ஷெராஃப். இவர் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப்பின் மகன் ஆவார். நடிகர் டைகர் ஷெராஃப்பும், நடிகை திஷா பதானியும் ஒருவரையொருவர் காதலிப்பதாக பாலிவுட்டில் செய்திகள் உலா வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலானது.

லாக்டவுன் நேரத்தில் காதலருடன் ஊர்சுற்றிய பாலிவுட் நடிகை.. வசமாக கவனித்த போலீசார்

இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் பந்தரா பகுதியில் டைகர் ஷெராஃப்பும், திஷா பதானியும் வெளியே சுற்றியுள்ளனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இருவரும் முறையான காரணம் சொல்லாத நிலையில் மும்பை போலீசார் வசமாக கவனித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story