கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை 28’ நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ

கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை 28’ நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ

கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சென்னை 28’ படத்தின் நடிகர்கள் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரானாவால் தமிழகத்தின் நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இதை தடுக்க பல்வேறு யுத்திகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவது அனைவரையும் கவலையடைய செய்கிறது. கொரானாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.

கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை 28’ நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ

அதேபோன்று சினிமா நட்சத்திரங்களும் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘சென்னை 28’ படத்தில் நடித்த பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் முதலில் பேசிய பிரேம்ஜி, எல்லோரும் ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் சமூக இடைவெளியுடன் இருந்து வருகிறோம். நாங்கள் மாஸ்க் போட்டிருக்கோம். நீங்களும் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். அடுத்து பேசிய நிதின் சத்யா, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே போங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறியுள்ளார். கடைசியாக பேசிய அரவிந்த், மாஸ்க் போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக்கொண்டார்.

Share this story