இந்த மாதிரி ஒரு சீன் வச்சது சந்தோஷம்… மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சி குறித்து சின்மயி!

இந்த மாதிரி ஒரு சீன் வச்சது சந்தோஷம்… மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சி குறித்து சின்மயி!

மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியானதை அடுத்து பாடகி சின்மயி அதுகுறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘மாஸ்டர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் புதிதாக இருந்தது. விஜயை வேறொரு கோணத்தில் காண்பித்திருந்தார் லோகேஷ். ட்ரைலரில் இடம் பெற்ற ஒரு காட்சி படத்தில் இல்லை என்று பலர் குழம்பினார்.

இந்த மாதிரி ஒரு சீன் வச்சது சந்தோஷம்… மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சி குறித்து சின்மயி!

அதைப் போக்கும் விதமாக சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியானது. அதில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சபிதாவிற்கு விஜய் நீதி வாங்கிக்கொடுப்பதாக இருந்தது. மேலும் அந்தக் காட்சியில் இன்னும் எத்தனை நாளுக்கு தான் பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸ குத்தம் சொல்லிட்டு இருக்கப்போறிங்க!” என்ற வசனம் இடம் பெற்றிருந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை ஏன் படத்தில் வைக்கவில்லை என்று படக்குழுவை ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அந்தக் காட்சி குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டீவீட்டில் “இந்த காட்சியை இயக்குனர் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் நாட்களிலாவது பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கட்டவர்கள் மீது பழி சுமத்தப்படாது என்று நம்புவோம். அதுவரை நாம் காத்திருப்போம். வைரமுத்துக்கள், ராதா ரவிகள், எம்.ஜே.அக்பர்கள் போன்றோர் இருந்தாலும் தொடர்ந்து குரலெழுப்புங்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு துணை நிற்பவர்களை தவிர மற்ற யாரையும் நான் குறிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Share this story