ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிக்க ராஜமௌலியிடம் அனுமதி கேட்ட சிரஞ்சீவி!

ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிக்க ராஜமௌலியிடம் அனுமதி கேட்ட சிரஞ்சீவி!

ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிப்பதற்கு ராஜமௌலியிடம் அனுமதி பெற்றுள்ளார் சிரஞ்சீவி.

கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிக்க ராஜமௌலியிடம் அனுமதி கேட்ட சிரஞ்சீவி!

தற்போது ராம் சரண் இந்தப் படத்தின் 30 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நக்சலைட் ஆக நடிக்கிறார் என்றும், பிளாஷ்பேக் போர்சனில் வரும் சிரஞ்சீவியின் வேடத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிக்க ராஜமௌலியிடம் அனுமதி கேட்ட சிரஞ்சீவி!

தற்போது ஆச்சார்யா படத்தில் ராம் சரண் நடிப்பதற்கு சிரஞ்சீவி ராஜமௌலியிடம் அனுமதி கேட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். ராம் சரணின் அம்மா சிரஞ்சீவியும் ரேம் சரணும் திரையில் ஒன்றாக நடிப்பதைப் பார்க்க விரும்புகிறார் என்பதால் சிரஞ்சீவி ராஜமௌலியிடம் ஆச்சார்யா படத்திற்கு தேதி வழங்க அனுமதி கேட்டுள்ளார். ராஜமௌலியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஆச்சார்யா படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள சிரஞ்சீவி அதற்குள் படத்தை முடித்துக் கொடுப்பதற்காக தான் துரிதமாக செயல்பட்டு வருகிறாராம்.

Share this story