திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்த சிரஞ்சீவி!

திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்த சிரஞ்சீவி!

மெகாஸ்டார் சிரஞ்சீவி திரைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, சிரஞ்சீவி திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்வதாக முன்னர் தெரிவித்திருந்தார். இன்று முதல் அதைத் துவங்கியுள்ளார்.

திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்த சிரஞ்சீவி!

“இன்று முதல் கொரோனா க்ரைஸிஸ் சேரிட்டி (சி.சி.சி) அப்பல்லோ 247 & சிரஞ்சீவி சேரிட்டபிள் ட்ரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து 24 கைவினை, திரைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியது” என்று தெரிவித்துள்ளார் .

ஏற்கனவே அல்லு அர்ஜுன் தன் படத்தில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் சிரஞ்சீவி ஏற்பாடு செய்துள்ள கொரோனா தடுப்பூசி முகாமின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this story