பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு கொரானா..

பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு கொரானா..

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் செந்திலுக்கு கொரானா தொற்று உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு கொரானா..

80-களில் காமெடி மன்னனாக இருந்து கலக்கியவர் செந்தில். தற்போது அவர் நீண்ட நாள் கழித்து புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். கடந்த மாதம்தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவுற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சினிமாவை தவிர அரசியலில் உள்ள செந்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு சரியான மரியாதை இல்லை என்று கூறி பா.ஜ.கவில் அண்மையில்தான் இணைந்தார். இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். சுமார் ஒரு மாதம் தீவிர பிரச்சாரம் செய்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து.

பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு கொரானா..

இந்நிலையில் அவருக்கு கொரானா அறிகுறியும் தென்பட்டதை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருந்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனார். இதனால் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story