தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

கொரானாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நடிகை பவித்ர லட்சுமி, அதிதி பாலன் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

இந்தியாவில் கொரானா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் உச்சக்கட்டத்தை அடையும் என கூறப்படுகிறது. இதனால் ஒரு வார முழு ஊரடங்கை தமிழக அரசு இன்றிலிருந்து அமல்படுத்தி வருகிறது. அதேநேரம் தடுப்பூசிப்போடும் பணியையும் துரிதப்படுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்த போதிய அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

இதற்கிடையே சினிமா நட்சத்திரங்களும் இந்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. திரைத்துறையை சார்ந்த பல நடிகர், நடிகைகள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் புகழ்பெற்ற நடிகை பவித்ரா, தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

இதேபோன்று ‘அருவி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை அதிதி பாலனும் தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகை ஸ்வாதிஷ்தா, இயக்குனர் சஞ்சய் பாரதி உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரபல நடிகைகள்..

Share this story