“சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான்”… அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை!

“சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான்”… அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை!

இன்று கர்ணன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் இயக்குனர் மாரி செல்வராஜ், ரஜிஸா விஜயன், சந்தோஷ் நாராயணன், தீ உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். தனுஷ் தற்போது கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருப்பதால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான்”… அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை!

அந்த அறிக்கை பின்வருமாறு:

“கர்ணன் குழுவின் press மீட்டில் கலந்து கொண்டதற்கும், கர்ணன் திரைப்படத்திற்கு தொடர்ந்து பெரும் ஆதரவு தந்து வரும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன் கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்த படத்துல இருக்காங்க. இந்த படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விஷயங்கள கத்துகொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட humanity யும் தினம் தினம் ஒரு surprise ஆ இருந்தது. ஒரு person மாரி மாதிரி ஒரு நல்ல human ஆ இருக்க முடியுமானு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் life ல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டு இருக்கு.

“சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான்”… அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை!

என்னையும் நான் தேர்ந்தெடுக்குற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திடே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கனும் அப்படிங்கிற சக்திய கொடுத்துட்டே இருக்கு.

நம்ம மண்ணோட இசை வழியாகவும், அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ் கர்ணனுக்கு ஒரு யானை பலத்தை சேர்த்திருக்கார் அவருக்கு thanks.

“சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான்”… அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை!

எனக்கு well – wishers கம்மி தான், என்னோட genuine ஆன well wisher ஆ இருந்ததுக்கு ரொம்ப thanks. சந்தோஷ் இந்த இடத்துல நான் மீனா சந்தோஷ் அவர்களுக்கும் என் நன்றிய சொல்லணும். அவங்க தான் எனக்கு மாரி செல்வராஜ அறிமுகப்படுத்தி வச்சாங்க.

Thank you, தேனி ஈஸ்வர் சார் உங்களோட work அ பார்த்த எல்லாரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க All the best, சார் கர்ணன் ஓட மொத்த Cast and Crew க்கும், அவங்க dedication, love, support எல்லாத்துக்கும் நன்றி இந்த படத்துக்காக உடல்ரீதியா, மனரீதியா emotional ஆ என்ன விட அதிகமான உழைப்ப அவங்க எல்லாருமே போட்டுருக்காங்க கர்ணன் இவ்ளோ நம்பகத்தன்மையோட, authentic ஆ இருக்கு அப்படினா , அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால தான் எனக்கு தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி நான் என்னோடு best அ கொடுக்க, எப்போதும் try பண்றேன் கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்தததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி கர்ணன் வருவான் சீறும் கேள்விகளை ஏந்தி வருவான் ஓம் நமசிவாய, தனுஷ்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story