நாளை வெளியாகிறது ‘கர்ணன்’ படத்தின் 4வது பாடல்… படக்குழு அறிவிப்பு…
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகிறது.
‘கர்ணன்’ திரைப்படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. ஒரு கிராம பின்னணி கொண்ட சாதாரண ஹீரோவின் போராட்ட களத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் படமாக இந்த படம் இருக்கலாம் என தெரிகிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.’கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது.ஏற்கனவே இந்த இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவதாக வெளியான ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அது ‘மஞ்சனத்தி புராணம்’ என மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில் நான்காவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.’உட்டுராதீங்க யப்போ’ என பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.