எந்த தடையுமின்றி சுதந்திர மாக ‘கர்ணன்’ படத்தை எடுத்தேன் – மாரி செல்வராஜ்

எந்த தடையுமின்றி சுதந்திர மாக ‘கர்ணன்’ படத்தை எடுத்தேன் – மாரி செல்வராஜ்

என் முதல் படத்தை போன்று ‘கர்ணன்’ படத்தையும் எந்த தடையுமின்றி சுதந்திரமாக எடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

எந்த தடையுமின்றி சுதந்திர மாக ‘கர்ணன்’ படத்தை எடுத்தேன் – மாரி செல்வராஜ்

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.‌ இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ’கர்ணன்’ படத்தின் டீசர்‌ வெளியாகி நல்ல‌ வரவேற்பை பெற்றுள்ள‌து. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது.

எந்த தடையுமின்றி சுதந்திர மாக ‘கர்ணன்’ படத்தை எடுத்தேன் – மாரி செல்வராஜ்

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‘கர்ணன்’ படத்தை எடுக்க தயாரிப்பாளர் தாணு கடைசி வரை உறுதுணையாக இருந்தார். பரியேறும் பெருமாள் படத்தை போன்று, இந்த படத்தையும் சுதந்திரமாக எடுத்தேன்.இந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்க கிராம பகுதிகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினேன்.

எந்த தடையுமின்றி சுதந்திர மாக ‘கர்ணன்’ படத்தை எடுத்தேன் – மாரி செல்வராஜ்

மேலும், என்னுடைய நடிப்பை மெருகேற்றியது, கூட நடித்த சக கலைஞர்களும், ஊர் மக்களும் தான் என்று தனுஷ் என்னிடம் கூறினார். இந்த படத்தை முழுவதுமாக பார்த்தபோது, என்னை கட்டி அனைத்து முத்தம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

Share this story