‘கர்ணன்’ படத்திற்கு இடைக்கால தடையா ?… நடிகர் தனுஷ்,இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நோட்டீஸ்…

‘கர்ணன்’ படத்திற்கு இடைக்கால தடையா ?… நடிகர் தனுஷ்,இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நோட்டீஸ்…

கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘கர்ணன்’ படத்திற்கு இடைக்கால தடையா ?… நடிகர் தனுஷ்,இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நோட்டீஸ்…

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். இதில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘கர்ணன்’ படத்திற்கு இடைக்கால தடையா ?… நடிகர் தனுஷ்,இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நோட்டீஸ்…

கர்ணன் படத்தை வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளகயாகியுள்ளன.அதில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘கர்ணன்’ படத்திற்கு இடைக்கால தடையா ?… நடிகர் தனுஷ்,இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நோட்டீஸ்…

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள “பண்டாரத்தி புராணம்” என்ற பாடல், குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கு குறித்து நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் தணிக்கைத்துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

Share this story