’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் சினிமாவுக்குள் அறிமுகமானார் தனுஷ். அவரது முதல் திரைப்படமான ’துள்ளுவதோ இளமை’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து செல்வராகவனுடன் இணைந்து அவர் பணியாற்றிய ‘காதல் கொண்டேன்’, புதுப்பேட்டை போன்ற படங்கள் தனுஷுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவர் இன்று ஹாலிவுட், பாலிவுட் என டாப் ஸ்டாராக வலம் வருகிறார்.

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

தனுஷ் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்திப் படமான ‘அத்ரங்கி ரே’வில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

அதனைத் தொடர்ந்து செல்வராகவன், மித்ரன் ஜவஹர், ராம்குமார் மற்றும் ஹாலிவுட் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

செல்வராகவன் படத்தில் மீண்டும் பழைய கூட்டணி ஒன்றிணைகிறது. செல்வராகவனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்விட்டல் பதிவிட்டுள்ளார். அதில், “செல்வராகவன் + யுவன் + அரவிந்த் கிருஷ்ணா.. அட அட… சரியாக நான் தொடங்கிய இடம். என்னைச் செதுக்கிய, உருவாக்கிய, நான் இன்று இந்த நிலையில் இருக்க ஒரே காரணமான என் சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த முறையாவது அவரை ஈர்ப்பேன் என்று நம்புகிறேன்”.என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story