நவரசா அந்தாலஜி படத்திலிருந்து விலகிய பிரபல இயக்குனர்!

நவரசா அந்தாலஜி படத்திலிருந்து விலகிய பிரபல இயக்குனர்!

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா அந்தாலஜி படத்தில் இருந்து இயக்குனர் கேவி ஆனந்த் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது கதைகளைக் கொண்ட ‘நவரசா‘ என்ற அந்தாலஜி உருவாகி வருகிறது.

நவரசா அந்தாலஜி படத்திலிருந்து விலகிய பிரபல இயக்குனர்!

இந்த சீரிஸை கே.வி. ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ஆர் ரதிந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குழுவில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவரசா அந்தாலஜி படத்திலிருந்து விலகிய பிரபல இயக்குனர்!

தற்போது இயக்குனர் கேவி ஆனந்த் இந்தப் படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஆசை, ரிதம் படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் இணைந்துள்ளாராம். இவர் இயக்கத்தில் அதிதி பாலன் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் காரைக்குடியில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கவும் இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

மற்ற பகுதிகளின் படப்பிடிப்புகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மே மாதம் இந்தப் படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story