லிங்குசாமி படத்தில் நான் வில்லனாக ? மாதவன் கொடுத்த அதிரடி விளக்கம் !

லிங்குசாமி படத்தில் நான் வில்லனாக ? மாதவன் கொடுத்த அதிரடி விளக்கம் !

இயக்குனர் லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் நடிப்பு குறித்து நடிகர் மாதவன் விளக்கமளித்துள்ளார்.

லிங்குசாமி படத்தில் நான் வில்லனாக ? மாதவன் கொடுத்த அதிரடி விளக்கம் !

‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி, ரன், சண்டகோழி உள்ளிட்ட மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக மாறினார். ஆனால் அவர் கடைசியாக இயக்கிய ‘வேட்டை’, ‘சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும் சருக்கலை சந்தித்தன. தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ள இயக்குனர் லிங்குசாமி, பிரபல நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

லிங்குசாமி படத்தில் நான் வில்லனாக ? மாதவன் கொடுத்த அதிரடி விளக்கம் !

இந்த படத்தில் கதாநாயகியாக ‘உப்பென்னா’ புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இதற்கிடையே நடிகர் மாதவன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் ஒன்று அண்மையில் பரவியது. மாதவன் ஏற்கனவே லிங்குசாமியுடன் ரன், வேட்டை ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இதில் ரன் திரைப்படம் மாதவனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் நான் லிங்குசாமி படத்தில் பணியாற்றுகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குனர் லிங்குசாமியுடன் பணியாற்றுவதில் மிகப்பெரிய சந்தோஷம். அவர் ஒரு அற்புதமான மற்றும் அன்பான மனிதர் என்றார். துரதிஷ்டவசமாக சமீபத்தில் வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று மாதவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாதவன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்ம்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் நடிகர் அருண் விஜய்யிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story