மாஸ்டர் 30-வது நாளில் தியேட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய லோகேஷ் கனகராஜ்!

மாஸ்டர் 30-வது நாளில் தியேட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய லோகேஷ் கனகராஜ்!

‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி 30 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதம் 13-ம் தேதி இப்படம் வெளியானது. எனவே நேற்றோடு படம் வெளியாகி 30 நாட்கள் நிறைவடைந்தது. 30 நாட்கள் ஆகியும் தியேட்டரில் படத்தைப் பார்க்க குடும்ப ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மாஸ்டர் 30-வது நாளில் தியேட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய லோகேஷ் கனகராஜ்!

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆவடியில் உள்ள ராக்கி சினிமாஸ் தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இயக்குனர் பார்வையாளர்களிடம், “படம் ரிலீஸ் ஆகி 30 நாள் ஆகியும் நீங்க எல்லாரும் தியேட்டருக்கு வந்தது மகிழ்ச்சி. படத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. கவலைப்பட வேண்டாம். நான் முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்பேன்.” என்று பேசினார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்களை ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார்.

Share this story