‘கே.ஜி.எப் 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க தயக்கம் காட்டும் படக்குழு ?

‘கே.ஜி.எப் 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க தயக்கம் காட்டும் படக்குழு ?

கொரானாவால் திட்டமிட்டபடி ‘கேஜிஎப் 2’ படத்தை வெளியிட முடியாத நிலையில் புதிய தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கே.ஜி.எப் 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க தயக்கம் காட்டும் படக்குழு ?

இயக்குனர் பிரசாந்த் நீல் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எப்’. நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ‘கே.ஜி.எப் 2’ உருவாகி வருகிறது. இப்படம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

‘கே.ஜி.எப் 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க தயக்கம் காட்டும் படக்குழு ?

யாஷ் ஹீரோவாக நடிக்க, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வில்லனாக கருதப்படும் சூரியவர்மாவின் தம்பியான ஆதிரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இவர்களுடன் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

‘கே.ஜி.எப் 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க தயக்கம் காட்டும் படக்குழு ?

இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கேஜிஎப் 2’ வரும் ஜூலை 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரானா உக்கிர தாண்டவம் தொடர்வதால் திட்டமிட்டபடி வெளியிட முடியாது. அதனால் வேறு ஒரு தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தசரா பண்டிகையொட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதிலும் ஒரு சிக்கல் நீடித்து வருகிறது. கொரானா தலைவிரித்தாடுவதால் இந்த ரிலீஸ் அறிவிக்க படக்குழு தயக்கம் காட்டி வருகிறது. எப்படி இருப்பினும் ஜூலை 16ம் தேதிக்குள் படக்குழு ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Share this story