தொடர்ந்து 8 வது முறையாக கைகோர்க்கும் செல்வராகவன் -யுவன் காம்போ !

தொடர்ந்து 8 வது முறையாக கைகோர்க்கும் செல்வராகவன் -யுவன் காம்போ !

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ‘சாணிக் காயிதம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இதுவரை புதுமுகங்களை நடிகராகிய இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் தானே களமிறங்கி நடிக்கிறார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘சாணிக் காயிதம்’ படத்தை முடித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும், அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவது இது 8 வது முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், யுவன் ஷங்கர் ராஜாவுடன் உடன் 8 வது முறையாக கைகோர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்!

Share this story