விஜய் சேதுபதி பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

விஜய் சேதுபதி பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவரது வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் சேதுபதி பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

அவரின் நண்பர் அசகன் தமிழ்மானியிடம் பேசிய போது “ஜனநாதன் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மதியம் மதிய உணவுக்காக தனது வீட்டிற்குச் சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. எனவே அவரது உதவியாளர்கள் அவரது வீட்டிற்குச் சென்றனர். அங்கு சென்று பார்க்கும் போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிறப்பு நரம்பியல் மருத்துவர் வரலவழைக்கப்பட்டு அவரைப் பரிசோதித்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

ஜனநாதன் விஜய் சேதுபதி மற்றும் ஷ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவரின் இந்த உடல்நல பாதிப்பு பலரது மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாதன் இதுவரை இயற்கை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Share this story