வாழ்த்துக்களுக்கு பதிலளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது – வெங்கட் பிரபு!..

வாழ்த்துக்களுக்கு பதிலளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது – வெங்கட் பிரபு!..

வாழ்த்துக்களுக்கு பதிலளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

கொரானா காலத்திலும் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இரவு வரை நடைபெற்ற இந்த தேர்தலில் திமுக கூட்டணிகள் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இதையடுத்து 50 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக முதல்வராக ஸ்டாலின் பொறுபேற்க உள்ளார்.

வாழ்த்துக்களுக்கு பதிலளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது – வெங்கட் பிரபு!..

இதைத்தொடர்ந்து வரும் 7ம் தேதி எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய விருந்துனர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றிப்பெற்ற ஸ்டாலினுக்கு பல்வேறு முக்கிய நபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று திரைத்துறையினரும் சமூகவலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு முதல்வராக பொறுபேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு பதிவில், எங்கள் மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் கூறும் வாழ்த்துக்களுக்கு நீங்கள் பதிலளிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கொரானா காலத்தில் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ஒன்றிணைவதை முதல்முறையாக பார்க்கிறேன். இந்த நேர்மறை எண்ணம் எப்போதும் இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share this story