நாயக்கர் வருவார், தரமான சம்பவம் இருக்கு… தாதா 2 படம் குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ!

நாயக்கர்  வருவார்,    தரமான சம்பவம் இருக்கு… தாதா 2 படம் குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ!

இயக்குனர் விஜய் ஸ்ரீ ‘தாதா 2.0’ படத்தின் படப்பிடிப்பு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘தாதா’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோக்கல் தாதாவாக நடித்திருந்த சாரு ஹாசனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நாயக்கர்  வருவார்,    தரமான சம்பவம் இருக்கு… தாதா 2 படம் குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ!

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பக்கத்தினை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் விஜய் ஸ்ரீ.

லாக்டவுன் நீக்கத்திற்குப் பின்னர் பட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகப் படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை படப்பிடிப்பு துவங்கவில்லை. இதனால் படம் குறித்த பல வதந்திகள் எழ ஆரம்பித்துள்ளது. எனவே படத்தின் இயக்குனர் தாதா 2 படம் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதில் “சாருஹாசன் 90 வயது என்பதால் ( தாதா2.0 ) வைத்து நான் இயக்கிய வந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலகட்டம் என்பதால் மட்டுமே ஒத்தி வைத்து உள்ளோம் .விரைவில் நல்லது நடக்கும் . உலக நாயகனின் அண்ணாதா ‘நாயக்கர் வருவார் ‘ தரமான சம்பவம் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Share this story