திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

திரிஷ்யம் 3 கதையை ரசிகர்கள்‌‌அனுப்பவேண்டாம் நானே தயார் செய்யப்போகிறேன்‌ என ஜீத்து ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார்.

திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம்‌ திரிஷ்யம்.மோகன் லால், மீனா இணைந்து நடித்த இந்த படம்‌, ஒரு சாதாரண மனிதனின் இயல்பான வாழ்க்கையின்‌ பிரதிபளிப்பை உணர்ந்தியிருக்கும். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலை குவித்தது.

திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

பிற மொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்ற இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. கடந்த மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றியை பெற்றது.இதையடுத்து மூன்றாம் பாகத்தை இயக்கப்போவதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்தார். மூன்றாம் பாகத்தின் கிளைமாக்ஸ் கூட முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள‌ அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தேன். அப்போது என்னிடம் கதை சொல்ல விரும்புபவர்கள் எனது இமெயிலில் ஐடியில் அந்த கதைகளை அனுப்பலாம் என்று கூறியிருந்தேன். அடுத்து திரிஷ்யம் 3 திரைப்படம் இயக்கப்போவதாக நான் அறிவித்துள்ளதால், அதற்கான கதை எனக்கூறி ரசிகர்கள் நிறைய கதைகள் அனுப்புகின்றனர்.இதனால் எனது இமெயில் நிரம்பி வழிகிறது. யாரும் எனக்கு கதையை அனுப்ப வேண்டாம். திரிஷ்யம் 3 கதையை நானே உருவாக்கப்போகிறேன் என ஜீத்து ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story