உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

‘2020 வருஷம் எப்படி..!?’ என்று யாருகிட்டயாவது கேட்டால் நம்மள எதைக் கழட்டி அடிப்பார்கள் என்பது பதில் சொல்லுற ஆளின் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், நடிகர் கார்த்தியிடம் கேட்டால் கொஞ்சம் துயரமான ஆண்டுதான் இருந்தாலும் கொஞ்சம் சந்தோசமான வருசம்தான் என்றுதான் சொல்லுவார். அதற்கான காரணத்தைச் சொன்னால் உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

பத்து வருசத்துக்கு முன்னாடி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை ஞாபகம் இருக்கா.! கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா தொடங்கி பலபேர் நடித்திருப்பார்கள். அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அதில் ஒர்க் பண்ணின டெக்னீஷியன் உட்பட அத்தனை பேரும் ரொம்பவே மெனக்கிட்டு வேலை பார்த்திருந்தார்கள். ஆனால், படம் பேசப்பட்ட அளவுக்கு பெரிதாகப் போகவில்லை என்பதில் பலருக்கும் வருத்தம்.

உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

மீடியாக்களில் வந்த விமர்சனங்களில் பெரும்பாலும் குறிப்பிடப்பட்ட ஒரு விசயம்… ‘இந்தப் படத்தில் நிறைய குறியீடுகள் இருக்கு. இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு ரசிகர்களிடம் பக்குவம் இல்லை. பத்து வருசத்துக்கு அப்புறம் பார்க்கும் போது எல்லோருக்கும் புடிக்கும்’ என்பதுதான். வார்த்தைக்கு சொன்னார்களோ இல்லை ஆருடம் சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை! நாளைக்கு (டிசம்பர்-31) மீண்டும் தியேட்டரில் வெளியிடப்போகிறார்கள்.

உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

தமிழ் நாடு முழுக்க கிட்டத்தட்ட அறுபது தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னன்னா… ஆன் லைன் புக்கிங் ஆரம்பிச்ச அடுத்த சில மணி நேரத்தில் எல்லா தியேட்டரும் கிட்டத்தட்ட ஃபுல்! இப்போ சொல்லுங்க கார்த்திக்கு இந்த ஆண்டு அட்டகாசம்தானே.!

Share this story