டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் படங்களில் பணியாற்றிய பிரபல எடிட்டர்

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் படங்களில் பணியாற்றிய பிரபல எடிட்டர்

பிரபல எடிட்டர் ரூபன் புஷ்பா படத்தின் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

கோலிவுட்டின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் ரூபன். தமிழில் வெளியான பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு ரூபன் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் படங்களில் பணியாற்றிய பிரபல எடிட்டர்

கோலிவுட்டைக் கலக்கிய ரூபன் தற்போது டோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார். ஆம், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திற்கு ரூபன் எடிட்டராக இணைந்துள்ளார். புஷ்பா படத்தின் டீசரை அவர் தான் எடிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் படங்களில் பணியாற்றிய பிரபல எடிட்டர்


அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா’ திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. வரும் தெலுங்கு புத்தாண்டு தினத்தில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு மும்மரமாக பணியாற்றி வருகின்றனர்.

புஷ்பா படத்தில் ரஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தனக் கடத்தல் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். ஃபஹத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story