ஆர்டர் பண்ணது ஆப்பிள் வாட்ச், ஆனா வந்தது!?… பிரபல நிறுவனத்தால் மோசடிக்கு ஆளான இசையமைப்பாளர்!

ஆர்டர் பண்ணது ஆப்பிள் வாட்ச், ஆனா வந்தது!?… பிரபல நிறுவனத்தால் மோசடிக்கு ஆளான இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான் ஒரு பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகமாகி வருகின்றன. அதில் ஒன்று ஆன்லைன் ஷாப்பிங். நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான போலியை டெலிவரி செய்து ஏமாற்றுவார்கள். இன்னும் சில சமயங்களில் வெறும் கற்கள் தான் பார்சலுக்குள் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் சாமிற்கு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் சகோதரருக்கு பிளிப்கார்ட் மூலம் ஆப்பிள் வாட்ச் பரிசாக அனுப்பினேன். ஆனால் வாட்சிற்குப் பதிலாக அழகாக பேக் செய்யப்பட்ட கற்கள் இருந்ததைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்ததோம். நாங்கள் இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்த போது எங்கள் பணம் திரும்ப அளிக்க மறுக்கப்பட்டது. தயவு செய்து பிளிப்கார்ட்-ல் இருந்து மீண்டும் பொருள்கள் வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

சாம் சிஎஸ் விக்ரம் வேதா, கைதி, இஸ்பேட் ராஜாவும் இருதய ராணியும் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மாதவன் நடித்து வரும் ராக்கெட்ரி: நம்பி எபெக்ட் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Share this story