என் மார்பில் கை வைத்து… பிரபல பாடகிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்!
பிரபல பாடகி நேஹா பாசின் தான் சிறுவயதில் பல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி நேஹா பாசின் பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் சத்தம் போடாதே படத்தில் பேசுகிறேன், பில்லா படத்தில் செய் ஏதாவது செய், வாகை சூட வா படத்தில் போறானே போறானே பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நேஹா, தனது 10 வயதில் ஹரித்வார் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.
“எனக்கு 10 வயதாக இருந்தபோது, இந்தியாவின் பிரபல ஆன்மிகத் தளங்களில் ஒன்றான ஹரித்வாரில் சென்றோம். அப்போது எனது அம்மா சிறிது தள்ளி நின்றார். திடீரென்று, ஒரு நபர் வந்து எனது பின்பகுதியில் கையை வைத்துவிட்டு ஓடிவிட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு, இதே போல் ஒருவன் எனது மார்பைப் பிடித்துவிட்டான். இதெல்லாம் என்னுடைய தவறு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, மக்கள் சமூக ஊடகங்களில் வந்து, மற்றவர்களை, உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியில் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி செயல்கள் மறைமுக பயங்கரவாதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.