அம்மா ஆகப்போகும் பிரபல பாடகி!
பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் முன்னணிப் பாடகி என்பது அனைவர்க்கும் தெரியும். இவரது குரலுக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழிலும் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல விருதுகளையும் இவர் வாங்கிக் குவித்துள்ளார்.
ஷ்ரேயா கோஷல் தனது காதலர் ஷிலாதித்யா என்பவரைக் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் மிகவும் பிஸியான பாடகியாக இருந்து வருகிறார்.
தற்போது ஷ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “குழந்தை ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார். இந்த செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால் உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதங்களும் தேவை.”
அதையடுத்து ஸ்ரேயா கோஷல் ஷீலாதித்யா ஜோடிக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.