பட்டப்பகலில் மர்மநபர்களால் பறிக்கப்பட்ட நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் !

பட்டப்பகலில் மர்மநபர்களால் பறிக்கப்பட்ட நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் !

கோலிவூட்டில் இளம் ஹீரோக்களில் ஒருவரான கெளதம் கார்த்திக்யின் விலையுயர்ந்த செல்போனை மர்மநபர்கள் பிடிங்கிச்சென்ற சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் மர்மநபர்களால் பறிக்கப்பட்ட நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் !

நடிகர் கார்த்திக்கின் மகன் மற்றும் இளவட்ட நடிகருமான கெளதம் கார்த்திக் இன்று சென்னையில் பரபரப்பாக காணப்படும் ஆல்வார்பேட்டை பகுதியில் சைக்கிள் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவரை நெருங்கி வந்த இரு மர்ம நபர்கள் அவரிடமிருந்து விலைஉயர்ந்த செல்போனை பறித்துச்சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் மர்மநபர்களால் பறிக்கப்பட்ட நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் !

இதனால் அதிர்ச்சி அடைந்த கெளதம் கார்த்திக் டி.டி.கே சாலையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடிகர் ஒருவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் இணைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவெல்ராஜா தயாரிக்கும் முப்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகையுள்ளார்.மேலும் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Share this story