கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.. புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு…

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.. புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு…

கௌதம் கார்த்திக் – சேரன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் – இயக்குனர் எழில் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா நடித்துள்ளார். இயக்குனர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்து வருகிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.. புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு…

இந்த படத்தை அடுத்து கௌதம் கார்த்திக் நடித்து வரும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவத்மிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.. புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு…

ஸ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங் 36 நாட்கள் வரை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

Share this story