என்னுடைய 50-வது படம் உருவாகும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது – ஹன்சிகா நெகிழ்ச்சி

என்னுடைய 50-வது படம் உருவாகும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது – ஹன்சிகா நெகிழ்ச்சி

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துவரும் அவரது 50ஆவது படம் ’மஹா’. மதியழகன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

என்னுடைய 50-வது படம் உருவாகும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது – ஹன்சிகா நெகிழ்ச்சி

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

‘மஹா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

என்னுடைய 50-வது படம் உருவாகும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது – ஹன்சிகா நெகிழ்ச்சி

அதில், “என்னுடைய 50வது படமான ‘மஹா’ உடனான தனித்துவமான பயணம் இது. இப்படத்தில் ஆத்மார்த்தமாக வேலை செய்த என்னுடைய சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய 50-வது படம் உருவாகும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது – ஹன்சிகா நெகிழ்ச்சி

.

Share this story