தனுஷ், செல்வராகன் இணையும் ஹாரர் படம்..! டைட்டில் என்ன தெரியுமா.!?

தனுஷ், செல்வராகன் இணையும் ஹாரர் படம்..! டைட்டில் என்ன தெரியுமா.!?

செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டடித்த படங்கள் இருப்பதால், அவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் பண்ணவிருக்கிறார்கள் என்ற தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

தனுஷ், செல்வராகன் இணையும் ஹாரர் படம்..! டைட்டில் என்ன தெரியுமா.!?

ஆயிரத்தில் ஒருவன் பார்ட் டூ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நிறைய இருப்பதால் அதை பக்காவாக முடித்துவிட்டுதான் படப்பிடிப்பைத் தொடங்குவோம் என்று அண்ணன் தம்பி இருவரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு படமும் பண்ணப்போகிறார்கள். கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன் தயாரிக்கவிருக்கிற இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று தெரிகிறது. அது குறித்து சினிமா இண்டஸ்ட்ரியில் விசாரித்த போது ஒரு புது தகவலைச் சொன்னார்கள்.

தனுஷ், செல்வராகன் இணையும் ஹாரர் படம்..! டைட்டில் என்ன தெரியுமா.!?

இந்தப் படத்தின் கதை அக்மார்க் ஹாரர் படமாக இருக்குமாம். ஏற்கனவே காதல் அடிதடி என்று பண்ணின இந்தக் காம்பினேஷன் இப்போதைய காலத்துக்கு தகுந்த மாதிரி ஒரு புது டிரெண்டையும், தனுஷ்க்கு புது ரூட்டைப் போட்டுக்கொடுக்கிற மாதிரியும் இருக்கிற கதையாகப் பண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள். படத்துக்கு தலைப்பு நான்கைந்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தனுஷ் அதில் ஒன்றை டிக் அடித்தாராம். அநேகமாக ‘ நானே வருவேன்’ என்பதாக இருக்கும் என்கிறார்கள்!

Share this story