ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்… ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ரத்தாகுதா ?

ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்… ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ரத்தாகுதா ?

ஐதராபாத்தில் அடுத்தடுத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ‘அண்ணாத்த’ படத்தின் நிலை என்னவாகும் என கேள்வி எழுந்துள்ளது.

ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்… ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ரத்தாகுதா ?

இந்தியா முழுவதும் கொரானா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பைவிட 2வது அலை வீரியமிக்கதாக உள்ளதால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு உள்ளது.இதனால் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதே நிலைதான் சினிமாத்துறையில் நீடிக்கிறது. இதனால் கொரானா வழிமுறைகள் பின்பற்றி ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்… ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ரத்தாகுதா ?

எவ்வளவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலும் ஷூட்டிங்கில் யாராவது ஒருவருக்காவது தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் ஐதராபாத்தில் பல திரைப்படங்களின் ஷூட்டிங் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் முதலில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மகேஷ் பாபு நடிக்கும் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தின் குழுவினருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று வெங்கடேஷ் நடிக்கும் ‘எப் 3’ படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்… ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ரத்தாகுதா ?

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் – சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது. ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று இந்த ஷூங்கில் ரஜினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் மற்ற படங்கள்‌ போன்று ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பும் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this story