நான் விஜய்யின் குட்டிக் கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகன்: நடிகர் காளிதாஸ் ஜெயராம்!

நான் விஜய்யின் குட்டிக் கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகன்: நடிகர் காளிதாஸ் ஜெயராம்!

பிரபல நடிகர் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தளபதி விஜயின் குட்டிக்கதைகள் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். காளிதாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தான் விஜய்யின் ‘குட்டி கதைகளின்’ பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார்.

நான் விஜய்யின் குட்டிக் கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகன்: நடிகர் காளிதாஸ் ஜெயராம்!

விஜய் படிக்கும் அதே கல்லூரியில் தான் காளிதாஸ் ஜெயராமும் படித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் விஜய் ரசிகர் என்று தெரிவித்தார். மேலும் விஜய் சொல்லும் குட்டிக் கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார்.

தான் மனசோர்வாக உணரும்போதெல்லாம் விஜய்யின் பேச்சுக்களையோ திரைப்படங்களையோ பார்ப்பதாகவும், விஜய்யின் ‘குட்டி கதைகள்’ பின்னால் உள்ள ரகசியத்தை அறிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் விஜய்யின் குட்டிக் கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகன்: நடிகர் காளிதாஸ் ஜெயராம்!

நடிகர் விஜய் தனது படங்களின் விழாக்களில் தொடர்ந்து சில குட்டிக் கதைகள் கூறி வருகிறார். அந்த குட்டிக் கதைகளுக்காகவே தவமிருப்பதாக விஜயின் தீவிர ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது காளிதாஸ் ஜெயராம் மலையாள படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார்.

Share this story