எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை, விசாவுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துகொண்டேன்… ராதிகா ஆப்தே ஓபன் டாக்!

எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை, விசாவுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துகொண்டேன்… ராதிகா ஆப்தே ஓபன் டாக்!

நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர். துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. இவர் நடிக்கும் படங்களில் இவர் கதாபாத்திரத்திற்கு முக்கிய பங்கு இருக்கும்.

ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி  ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் கூட நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி அளித்த ராதிகா விசா எளிதில் கிடைக்கும் என்பதால் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை, விசாவுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துகொண்டேன்… ராதிகா ஆப்தே ஓபன் டாக்!

ராதிகா ஆப்தே பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே மாதத்தில் 2012-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற திரைப்படவிழாவில் தனது கணவருடன் கலந்துகொண்டார். அந்த விழாவில் தான் ராதிகா பெனடிக்ட் டெய்லர் உடன் முதல் முறையாகக் காணப்பட்டார்.

தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று ராதிகா தெரிவித்துள்ளார். விசா பெறுவது எளிதானது என்பதால் மட்டுமே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை, விசாவுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துகொண்டேன்… ராதிகா ஆப்தே ஓபன் டாக்!

ராதிகா ஆப்தேவிடம் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, “திருமணம் செய்து கொண்டால் விசா பெறுவது எளிது என்பதை நான் உணர்ந்தபோது. மனிதர்களுக்குள் குறிப்பிட்ட எல்லைகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். எனக்கு திருமணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. விசா எளிதாக பெறுவதற்காக மட்டுமே நான் திருமணம் செய்தேன். இருப்பினும் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆப்தே கடைசியாக நவாசுதீன் சித்திக் உடன் ராத் அகெலி ஹை என்ற படத்தில் நடித்திருந்தார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Share this story