“நான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால் அது நிச்சயமாக தற்கொலை இல்லை”… பயல் கோஷின் பகீர் பதிவு!

“நான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால் அது நிச்சயமாக தற்கொலை இல்லை”… பயல் கோஷின் பகீர் பதிவு!

நடிகை பயல் கோஷ் தான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால் அது தற்கொலை அல்ல என்று பகீர் பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகை பயல் கோஷ் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பின்னர் அனுராக் இந்த குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்தார்.

“நான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால் அது நிச்சயமாக தற்கொலை இல்லை”… பயல் கோஷின் பகீர் பதிவு!

அதையடுத்து நடிகை டாப்ஸி, அனுராக்கின் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ், இரண்டாவது மனைவி கல்கி கோச்செலின், இயக்குனர்கள் அனுபவ் சின்ஹா, ராம் கோபால் வர்மா இன்னும் பலர் அனுராக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய பயல் கோஷ் “அனுராக் அவ்வளவு நல்ல மனிதர் என்றால் ஏன் அவரது இரண்டு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்தார்கள்” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

“நான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால் அது நிச்சயமாக தற்கொலை இல்லை”… பயல் கோஷின் பகீர் பதிவு!

பயல் கோஷ் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் ” அனுராக் காஷ்யப் பற்றிய முழு தகவலையும் ஒரு புகழ்பெற்ற செய்தி தளத்துடன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர்கள் காஷ்யப்பிடம் அனுமதி கேட்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இந்தியா, நான் சீலிங்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டால், நினைவில் கொள்ளுங்கள் நான் தற்கொலை செய்யவில்லை. அவர்கள் ஏற்கனவே மன அழுத்தம், மன நோய் என்ற கதையை எனக்காக தயார் செய்து வைத்திருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story