நீண்ட நாட்களுக்கு இளையராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல்… ‘மாமனிதன்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நீண்ட நாட்களுக்கு இளையராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல்… ‘மாமனிதன்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவதாக உருவாகியுள்ள படம் மாமனிதன். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்ம துரை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இருவரும் இணைந்து இசையமைத்துள்ள முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களுக்கு இளையராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல்… ‘மாமனிதன்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

தற்போது மாமனிதன் படத்தின் முதன் பாடலான தட்டிப்புட்ட பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இளையராஜா பாடியுள்ளார். பா விஜய் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல் உருவான விதத்தின் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்டுத்தியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு இளையராஜா இசை மற்றும் குரலில் ஒரு பாடல்… ‘மாமனிதன்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

இந்தப் படத்தை யுவனின் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டேஇப்படம் வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு படம் வெளியாகத் தயாராகியுள்ளது.

Share this story